பதிவு செய்த நாள்
28
பிப்
2015
12:02
18 சித்தர்களில் ஒருவரான பகவான் ராமதேவர் சித்தருக்கு, மதுரை அருகே உள்ள அழகர் கோவில் அழகர்மலையில் அமைந்துள்ள ராமதேவர் சித்தர் ஜீவ சமாதி பீடத்தில் 5-3-2015 அன்று பூரம் நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு மேல் குருபூஜை நடைபெறுகிறது. இந்த குருபூஜையை மதுரை, பகவான் ராமதேவர் சித்தர் அறக்கட்டளையும், மாங்குளம் பகுதி மக்களும் சேர்ந்து நடத்துகின்றனர். முன்னதாக கும்பமுனி அகஸ்தியர் சீடர் ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகள் தலைமையில் 4-3-2015 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த விழாவில் நாகப்பட்டினம், மகாலெட்சுமி நகர். ஸ்ரீசாய்பாபா திருக்கோயில், ஸ்ரீசாய்பாதம் மெய்யடிமை சுவாமிகளும், மானாமதுரை, வேதியனேந்தல் விளக்கு, ஸ்ரீமஹா ப்ரத்தியங்கிரா தேவி வேத தர்ம ஷேத்திரம், ஸ்ரீஞானசேகர சுவாமிகளும் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்
5-3-2015 காலை
5.30 மணி : 18ம் படி கருப்பணசாமியிடம் சாதுக்களுடன் <உத்தரவு பெறுதல்
6.30 மணி: சாதுக்களுடன் மலைக்கு புறப்பாடு இடம்: மாங்குளம் மண்டபம்
10.30மணி : அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
மதியம் 12.00 மணி : அழகர் கோவில் மாங்குளம் மண்டபத்தில் அன்னதானம்
தொடர்புக்கு: பகவான் ஸ்ரீராமதேவர் சித்தர் அறக்கட்டளை
பதிவு எண்: 539/09 212, நாயக்கர் புதுத் தெரு. மதுரை-1.
99947 93888, 88839 83605, 95858 52305