Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்றத்து கோயில் பங்குனி திருவிழா ... வெட்டுடையார் கோயிலில் மார்ச் 28ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமியை 10 நாட்கள் கொண்டாட வேண்டும்: தத்வபோதாநந்த சரஸ்வதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2015
01:03

புதுச்சேரி: இந்து மத மரபுப்படி, ராமநவமியை, பத்து நாட்களுக்கு கொண்டாட வேண்டும் என, சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார். புதுச்சேரி ஆர்ஷ வித்யா பவன் சார்பில், அண்ணா நகர் எட்டாவது குறுக்குத் தெருவில் உள்ள, சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், மார்ச் 22ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தினமும் சிறப்பு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொற்பொழிவு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். விழாவில் ராமச்சந்திரமூர்த்தி என்ற தலைப்பில் சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி பேசியதாவது: வட மாநிலங்களில், இந்து மத மரபுப்படி 10 நாட்கள் ராமநவமி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கு பெரும்பாலும் ஏழு நாட்கள்தான் ராமநவமி விழா கொண்டாடப்படுகிறது. எனவே, வரும் காலங்களில் மரபில் உள்ள படி ராமநவமி விழாவை 10 நாட்கள் கொண்டாட முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், பல்வேறு பகுதிகளில் ராமாயணம் குறித்த சொற்பொழிவுகள் நடந்து வருகிறது. அந்நாட்டின் விமான சேவை, இந்து தர்மத்தை குறிக்கும் வகையில் கருடா எனவும், வங்கி சேவை குபேர் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தர்மத்தின் மொத்த உருவமானவர் ராமச்சந்திரமூர்த்தி. எந்த விஷயத்தையும் சொல்வது எளிமை, அதனை கடைபிடித்து வாழ்வது கஷ்டம். ராமச்சந்திரமூர்த்தி காட்டிய வழியை, மானுடம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி பேசினார்.

புதுச்சேரி திருக்குறள் மன்ற தலைவர் கலியன் எதிராசன் சிறப்புரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று 23ம் தேதி, ஸ்ரீமதி சீதா மாதா என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை 24ம் தேதி, அகலிகா, தாரா, மண்டோதரி என்ற தலைப்பிலும், 25ம் தேதி, ராவணன் என்ற தலைப்பிலும், 26ம் தேதி, அனுமான் என்ற தலைப்பிலும், 27ம் தேதி, கைகேயி வரம் என்ற தலைப்பிலும், 28ம் தேதி, வாலி வதம் என்ற தலைப்பிலும் சிறப்பு சொற்பொழிவு, தினமும் மாலை 6.40 மணிக்கு துவங்கி, 8.௦௦ மணி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆர்ஷ வித்யா பவன் மற்றும் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலில் ஆஞ்சநேயரது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று ... மேலும்
 
temple news
பெரம்பலுார்; பெரம்பலுார் அருகே தேர் திருவிழாவின் போது, அச்சு முறிந்ததால், சுவாமியுடன் தேர் சாய்ந்து ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar