பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
12:04
பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின், பத்தாம் நாளில், திருக்கல்யாணம் மற்றும் தொப்போற்சவம் நடந்தது. பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் ஆலயத்தில் கடந்த, மார்ச் 24ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடந்து வரு கிறது. அன்ன வாகனம், சூரிய பிரபை, சிம்ம வாகனம், யானை வாகனம், காமதேனு வாகனம், நாக வாகனம், ராவனேஸ்வர வாகனம், பூத வாகனம் ரிஷப வாகனம் என, தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. விழாவின், பத்தாம் நாளான நேற்று முன்தினம், நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி, திரு க்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் நடந்தன. இரவு, 9:00 மணிக்கு, கோவிலின் முகப்பில் உள்ள, ‘ஆனந்தபுஷ்கரணி’ திருக்குளத்தில், தெப்போற்சவம் நடந்தது. பஞ்ச மூர்த்திகளுடன் மூன்று முறை திருக்குளத்தில் வலம் வந்து, தெப்போற்சவம் முடிந்தது தெப்போற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை வழிபட்டு சென்றனர்.