Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரகாளியம்மன் கோவிலில்ஆடி மாத ... குதிரை வாகனத்தில் வனபத்ரகாளியம்மன் திருவீதி உலா! குதிரை வாகனத்தில் வனபத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிலத்தில் சாமி சிலை இருப்பதாக பள்ளம் தோண்டியதால் பரபரப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

புதுச்சேரி: கோட்டக்குப்பம் அருகே முதியவர் அருள்வாக்கு கூறிய தனியார் இடத்தில், கிராம மக்கள் திரண்டு பள்ளம் தோண்டியதை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு மாத்துார் கிராமத்தில் பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பவுர்ணமியையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த முதியவர் ஓருவர், கோவில் பின்புறத்தில் உள்ள இடத்தில் ஆவுடை ஈசன் சிலை மண்ணில் புதைந்து கிடைக்கிறது, அதை தோண்டினால் ஊருக்கு நல்லது நடக்கும் என கூறியுள்ளார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியதால், அருள்வாக்கு கூறப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்க முடிவு செய்தனர். பூஜைகள் முடிந்ததும், மண்ணாங்கட்டி என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.அதிர்ச்சியடைந்த மண்ணாங்கட்டி, கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அரிகரன், சப் இன்ஸ்பெக்டர் மகிபாலன் தலைமையிலான போலீசார், பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். வானுார் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், மண்ணிற்கு கீழ் சிலை உள்ளதால் தொல்லியல் துறை மேற்பார்வையில் தோண்ட வேண்டும் என, அறிவுறுத்தினர்.இதனையடுத்து பள்ளம் தோண்டும் பணியை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். முதியவர் அருள்வாக்கை நம்பி, சாமி சிலையை கிராம மக்கள் நான்கு மணி நேரமாக தேடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar