Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் கோவிலில் வண்டி வேடிக்கை ... சென்னிமலை முருகனுக்கான வெள்ளி மயில் வாகனம்: புறப்பாடு நடத்துவதில் மெத்தனம்! சென்னிமலை முருகனுக்கான வெள்ளி மயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டு பழமையுடன் திருப்பணி: அபிராமி அம்மன் கோயிலில் புதுமை!
எழுத்தின் அளவு:
800 ஆண்டு பழமையுடன் திருப்பணி: அபிராமி அம்மன் கோயிலில் புதுமை!

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
11:08

திண்டுக்கல் : 800 ஆண்டு பழமையான தோற்றத்துடன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் பழமை வாய்ந்தது. கோயில் சிதிலமடைந்ததால் முழுவதும் இடிக்கப்பட்டு 2013 ஜூனில் திருப்பணிகள் துவங்கின. ஒரு ஏக்கரில் ௮௦௦ ஆண்டுகள் பழமையான தோற்றத்தில் திருப்பணிகள் நடக்கின்றன. இதற்காக ரூ.20 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. நெல்லை கருங்குளம், கன்னியாகுமரி மயிலாடியில் இருந்து 11 ஆயிரம் டன் கற்கள் கொண்டு வரப்பட்டு சிற்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்தபதிகள் ரமேஷ், பாஸ்கரன் தலைமையில் 80 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலில் ஹானபிம்கை, காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வர், அபிராமி அம்மன் என நான்கு மகா சன்னதிகள் உள்ளன. இவற்றில் முழுக்கால் வேலைப்பாடுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றை சுற்றிலும் விநாயகர், சோமசுந்தர், நாயன்மார்கள், கணபதி, மகாலட்சுமி வரதராஜபெருமாள், தண்டபாணி, வள்ளி தெய்வானை முருகன், நடராஜன், நவகிரகம், சுவாமி அம்மாள் பள்ளியறை சன்னதிகளும் உள்ளன. சிறிய தெப்பக்குளமும் புதிதாக உருவாக்கப்படுகிறது.

வெளிச்சம், காற்றோட்டத்திற்காக அர்த்த மண்டபங்களில் ஜாலமும், மேற்கூரையில் பர்கோலாவும் அமைக்கப்பட்டுள்ளன. 300 டன் கல்காரத்துடன் 52 அடி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு யாளி, எட்டு அனுவித்தி உட்பட ௪௮ துாண்கள் உள்ளன. ஒவ்வொரு துாணிலும் 12 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடவுள் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. விசிறி பாவுகல் மூலம் மேற்கூரை வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.

வேலைப்பாட்டில் அதிசயம்: பொறியாளர் ஆர்.சுந்தரம் கூறியதாவது: திருப்பணிக்காக தமிழகம் முழுவதும் 20 பழமையான கோயில்களை பார்வையிட்டோம். 800 ஆண்டு பழமையுடன் கோயில் கற்சிற்பங்களை வடிமைத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன் தான் மலைக்கோட்டையில் உள்ள விக்ரகம் இல்லாத அபிராமி அம்மன் கோயிலை பார்த்தோம். அதைப் போன்றே, தற்போது கட்டப்படும் கோயிலின் வேலைப்பாடும் இருந்தது அதிசயமாக இருந்தது. ஆறு மாதங்களில் திருப்பணிகள் முடிந்துவிடும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar