Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் ... உடுமலை காமாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவம்! உடுமலை காமாட்சி அம்மன் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய நாகபூண்டி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பெரிய நாகபூண்டி திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
11:08

பெரிய நாகபூண்டி: திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, அக்னி வசந்த உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டி, கங்கமாம்பாபுரம் கிராமத்திற்கு இடையே, ஏரிக்கரையில் பஞ்ச பாண்டவர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சீரமைப்பு பணி, இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று காலை, கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி முதல் கால யாகசாலை பூஜையும் நடத்தப்பட்டன. நேற்று காலை 5:30 மணிக்கு மகாசங்கல்பம், யாத்ராதானமும், 9:00 மணிக்கு புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவர் மற்றும் கொடிமரத்திற்கும் கலச நீர் அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, அக்னி வசந்த உற்சவத்திற்கான கொடியேற்றம் நடந்தது. இதில், கங்கமாம்பாபுரம் மற்றும் பெரிய நாகபூண்டியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 4:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கோவில் சீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை, பெங்களூரைச் சேர்ந்த நரசராஜூ மற்றும் காந்தம்மாள் குடும்பத்தினர் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும், 31ம் தேதி வரை நடைபெற உள்ள அக்னி வசந்த உற்சவத்தின் நிறைவாக, 30ம் தேதி தீமிதி திருவிழாவும், மறுநாள் பட்டாபிஷேகமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar