பதிவு செய்த நாள்
07
செப்
2015
11:09
வாலாஜாபாத்: படுநெல்லி
கிராமத்தில், கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம்
அடுத்த, படுநெல்லி கிராமத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை,
6:00 மணி அளவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இரவு, 7:30 மணி அளவில், புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ்ணர் மலர்
அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, சருக்கு மரம் ஏறுதல்;
உறியடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 10:00 மணி அளவில், மலர்
அலங்காரத்தில் வீதியுஉலா நிகழ்ச்சி நடந்தது.