சிவகங்கை மாவட்டம் பாகனேரி புல்வன நாயகி அம்மன் கோவிலில் காய்ந்தவ கால கணபதி அருள்பாலிக்கிறார். மழை இல்லாத காலங்களில் இந்தச் சிலையின் மூக்கைத் தொடுமளவு தண்ணீர் நிரப்பி விடுவார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்யும். மழை பெய்யும் வரை இந்நீரை அகற்றுவதில்லை. இதே கோவிலில் முத்து விநாயகர் என்பவரும் அருள்கிறார்.