நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகிலுள்ள புத்தூர் முனியப்பன் கோயில் வளாகத்தில் குழந்தைகள், மனிதர்கள், பல்வேறு சுவாமிகளின் வண்ணச் சிலைகளைக் காணலாம். திருமணத் தடை நீக்கம். தொழில் அபிவிருத்தி, குழந்தைப்பேறு எனப் பலவகையான பிரார்த்தனைகளைச் செய்துகொண்ட பக்தர்கள், அவை நிறைவேறியதும் தங்களின் பிரார்த்தனக்கு ஏற்ப சிலைகளைச் செய்து நேர்த்திக் கடனாக கோயிலுக்கு கொடுத்துவிடுவார்களாம்.