Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி மலைக்கோவில் படியில் ... குன்றத்தில் மலைமேல் குமரருக்கு அக்.9ல் வேல் எடுக்கும் விழா! குன்றத்தில் மலைமேல் குமரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நற்செயல்களுக்கு துணை நிற்கும் அம்மன்!
எழுத்தின் அளவு:
நற்செயல்களுக்கு துணை நிற்கும் அம்மன்!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
10:09

ராமலிங்கம் நகர்: திருப்பூர் - பல்லடம் ரோடு, ராமலிங்கம் நகர் செல்லும் வழியில், புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது, முத்துமாரியம்மன்  கோவில். அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, அம்மன் சிலை வைத்து, வழிபடுகின்றனர். தினமும் காலை, மாலை இருவேளை பூஜை நடக்கிறது.  இதுதவிர, வெள்ளிக்கிழமை,  அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு  அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், வைகாசி மாதத்தில், சாட்டுவிழா ஏழு நாட்கள் நடைபெறுகிறது. தென்னம்பாளையம்  மாகாளியம்மன் கோவிலில் இருந்து, ஊர் பெண்கள், அம்மனுக்கு மாவிளக்கு, பூச்சட்டி எடுத்து வருகின்றனர். இக்கோவில் வளாகத்திலேயே, விநா யகர், கருப்பண்ணசாமி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ பூஜை நடைபெறுகிறது. புதிதாக ஒரு செயலை துவங்கும்முன்,  முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து, உத்தரவு கேட்டுச்செல்லும் வழக்கம், பக்தர்களிடம் இருக்கு. ஒரு காகிதத்தில் வெள்ளை அரளி, சிவப்பு அரளி  பூவை, தனித்தனியாக மடித்துக்கட்டி, அம்மனை வேண்டி, காலடியில் போடுகின்றனர். இரண்டு காகிதங்களில் ஒன்றை எடுப்பர்; பக்தர்கள், மனதில்  நினைத்த பூ வந்திருப்பின், அம்மன் உத்தரவு கிடைத்ததாக, மகிழ்ச்சியுடன் அச்செயலை துவங்குகின்றனர்; அம்மன் ஒப்புதல் இல்லையெனில்,  அச்செயலை சிறிது காலம் தள்ளிப்போடுகின்றனர். வீடு, நிலம், வாகனம் வாங்கும்போதும் அம்மனின் உத்தரவை பெறுகின்றனர்.“குடும்ப கஷ்டம்,  கணவன்-மனைவி ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளுடன், அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்; வேண்டுதல்  நிறைவேறியதும், குடும்பத்துடன் வந்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மார்கழி மாதம், 30 நாட்களும், அதிகாலையில் விசேஷ பூஜை  நடக்கிறது; பெண்கள் நலனுக்காக, ஐப்பசி மாதம் அம்மனுக்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. நல்ல காரியங்களுக்கு அம்மன்  என்றுமே தடை போட்டதில்லை; உடனே, உத்தரவு தருவாள்,” என்கிறார், கோவில் அர்ச்சகர்.

முத்துமாரியம்மன் கோவில்,
ராமலிங்கம் நகர்,
பல்லடம் ரோடு, திருப்பூர்.
தொடர்புக்கு: 99427 90480

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 
temple news
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.திருவாரூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில், திருநாளைப்போவார் என்கிற ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரமமோற்சவத்தில் நடக்கும் தெப்பல் திருவிழாவை ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் தை கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar