Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை சரஸ்வதி கோயிலில் ... பழநியில் வன்னிகாசூரன் வதம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! பழநியில் வன்னிகாசூரன் வதம்: ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்கா பூஜையுடன் கொலு வழிபாட்டை நிறைவு செய்த பெண்கள்!
எழுத்தின் அளவு:
துர்கா பூஜையுடன் கொலு வழிபாட்டை நிறைவு செய்த பெண்கள்!

பதிவு செய்த நாள்

22 அக்
2015
05:10

வத்திராயிருப்பு: நவராத்திரி திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து  வீட்டில் கொலுவழிபாடு செய்த பெண்கள் துர்காபூஜையுடன் கலசத்தை அகற்றி கொலுவழிபாட்டை நிறைவு செய்தனர். இந்துக்களுக்கான பண்டிகைகளில் நவராத்திரி திருவிழா முழுக்க பெண்களுக்கான ஒரு பண்டிகையாகும்.  எனவே  பெண்கள் இதனை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவார்கள்.   இதற்காக வீட்டில் கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்து 9 நாட்களும் பெண்கள் விரதமிருப்பார்கள்.  இவ்வாறு வீட்டில் கொலு வைப்பதால் அக்குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன், சுபிட்சம் கிடைத்து  நல்லகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.  9 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் இறுதிநாளில்  தாங்கள் வணங்கும் துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து முதல்நாள் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை அகற்றுவார்கள்.

பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய  இந்த நவராத்திரி விழா அக். 13 ல் துவங்கியது.   பெண்கள் வீடுகளை சுத்தம் செய்து பொம்மைகளை கொலு தர்பாரில் வரிசைப்படுத்தியும்,  இறைவனது நாடகங்களையும், லீலைகளையும் காட்சிப்படுத்தியும் வைத்தனர்.   அருகில் வசிக்கும் பெண்களை கொலுவிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மஞ்சள், ஆடைகள், பிரசாதம் வழங்கினர்.   தொடர்ந்து 9 நாட்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.  நேற்று நவராத்திரிக்கான கொலுவழிபாடு  முடிவடைந்தது.  பத்தாம் நாளில் கலசம் அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மகிசாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன், மகிசாஷ்வர அரக்கனை அழித்து சாந்தமாகிய பின் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar