பதிவு செய்த நாள்
02
நவ
2015
10:11
ஊத்துக்கோட்டை: கன்னியம்மன் கோவிலில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.ஊத்துக்கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ளது சப்த கன்னியர் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு, புதிதாக வர்ணம் பூசப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, காலை, 10:30 மணிக்கு, ஏழு கன்னியர்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.