சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அதேபோல் அம்பிகையை கொண்டாட உகந்த நாள் நவராத்திரியாகும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை நினைத்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. துர்க்கை - சரஸ்வதி - லட்சுமி ஆகிய மூன்று தெய்வங்களையும் கொலுவில் வீற்றிருக்க செய்து கொண்டாடும் நவராத்திரி விழா மிகச் சிறப்பானது. ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழிலுக்கும், மூலக்காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணு, ஆகியவற்றின் துணைவியர்களை பூக் கொண்டும், பாடல் கொண்டும் வழிபட்டால் தொல்லைகள் அகலும். தன வரவு கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகளும் வந்து சேரும்.