Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாகேஸ்வரத்தில் கார்த்திகை ... திறந்தவெளி மண்டபத்தில் வேண்டுதல் உருவார வழிபாடு! திறந்தவெளி மண்டபத்தில் வேண்டுதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி: போலீஸ் குவிப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி: போலீஸ் குவிப்பு!

பதிவு செய்த நாள்

05 டிச
2015
10:12

சபரிமலை: சபரிமலையில் இன்று மதியம் முதல் பாதுகாப்பு கெடுபிடிகள் கடுமையாக்கப்படும். இதற்காக கேரள போலீசாருடன் கர்நாடகா-ஆந்திரா போலீசாரும் இணைந்துள்ளனர். தமிழக போலீசார் மட்டும் வரவில்லை. டிச.6., பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் தங்கியுள்ள அனைவருக்கும் அடையாள அட்டை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அடையாளஅட்டை இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று மதியம் முதல் 7-ம் தேதி 11 மணி வரை பாதுகாப்பு மேலும் கடுமையாக்கப்படுவதாக சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி சுரேந்திரன் கூறினார்.

1600 கேரள போலீசாருடன் 200 ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போலீசார் சபரிமலையில் உள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படையினரும், பேரிடர் நிவாரண படையினரும் உள்ளனர். பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இருமுடி தவிர எந்தவிதமான பைகளும் சன்னிதானத்துக்கு கொண்டு செல்ல முடியாது. 5 மற்றும் 6-ம் தேதி இரவில் நடை அடைக்கப்பட்ட பின்னர் 18-ம் படியேற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடையாள அட்டை இல்லாத எவரும் சன்னிதானம் பக்கம் செல்ல அனுமதி இல்லை.

சன்னிதானம் செல்லும் எல்லா நுழைவு வாயில்களிலும் மெட்டல்டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகத்துக்கு கொண்டுவரப்படும் நெய் பாத்திரமும் மெட்டல் டிடெக்டர் கருவியால் சோதனை செய்யப்படும். நெய்தேங்காய் உடைக்கவும், காணிக்கை போடவும் மாற்று இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஐபி தரிசனத்துக்கும கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் ஆப்சென்ட்: வெளிமாநில குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அண்டை மாநில போலீசாரும் இங்கு பணியில் அமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில் கேரள போலீசின் கடிதத்தை ஏற்று ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போலீசார் வந்து விட்டனர். ஆனால் தமிழக போலீஸ் நேற்று வரை வரவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar