திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2015 10:12
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவார விழாவையொட்டி நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. காரைக்கால் திரு நள்ளார் தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத ÷ சாமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும். திருநள்ளார் கோவிலில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந் தது வந்தது. சோமவார நிறைவையொட்டி நேற்று 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவாஜனம், கலசபூ ஜை, மகா பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. பின், தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு அபிஷேகம் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சொர்ண கணபதி, முருகர், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்த ப்பட்டது. சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பீரான் சாமிகள் கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.