வாயுவின் புதல்வராகவும், ஸ்ரீராமரின் தூதராகவும் எங்கும் வெற்றியை அளிப்பவராகவும் பிரகாசிக்கும் ஆஞ்சநேயர். அனைவருக்கும் பொதுவானவர். ஜாதி, மத பேதமின்றி ஆண்/பெண்/ பெரியவர்/ சிறியவர் என அனைவரும், எங்கும், எப்போதும் ஆஞ்சநேயரை பூஜிக்கலாம். ஆஞ்சநேயர் மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களையும் ஆணும், பெண்ணும் என அனைவரும் பூஜிக்கலாம். ஸ்ரீராமருடன் சேர்ந்து ஆஞ்சநேயரை பூஜித்தால் அதிகமான நன்மைகள் உண்டு.