Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அதிசய ஆஞ்சநேயர் கோயில்! பாபா தன் மகா சமாதிக்கு விஜயதசமியை ஏன் தேர்ந்தெடுத்தார்? பாபா தன் மகா சமாதிக்கு விஜயதசமியை ...
முதல் பக்கம் » துளிகள்
கிருஷ்ணர் ஓய்வெடுத்த தலம்!
எழுத்தின் அளவு:
கிருஷ்ணர் ஓய்வெடுத்த தலம்!

பதிவு செய்த நாள்

29 ஜன
2016
05:01

மதுராவில் யமுனை நதிக்கரையில் குஞ்சகாலி என்ற இடத்தில், துவாரகாதீஷ் என்றழைக்கப்படும் கிருஷ்ணருக்கு பிரமாண்டமான கோயில் அமைந்துள்ளது. கம்சவதம் முடிந்ததும் கிருஷ்ணன் இந்த இடத்திற்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு துவாரகா சென்று ராதையோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கோயிலுக்குள் ஓர் ஆலமரத்தின் அடியில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் காணப்படுகிறது. கிருஷ்ணபரமாத்மா இங்கு வந்து சென்றதன் நினைவாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு பக்தை மீராவும் விஜயம் செய்து கிருஷ்ணரை தரிசித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். மீரா இசைத்த தம்பூரா பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சீடர்களுடன் இங்கு வந்த மகான் சைதன்ய பிரபு, மதுராவை அழகான நகராக மாற்றி ஜாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க பிரசாரம் செய்தார். அத்வைத தத்துவத்தையும் கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்தினார். 4-ம் நூற்றாண்டில் இங்கு வந்த சீன யாத்ரிகர் மெகஸ்தனிஸ் இப்பகுதியைப் பார்த்துவிட்டு கிருஷ்ண வழிபாட்டுக்குரிய முக்கிய தலம் இது என்றார். 6-ம் நூற்றாண்டில் இப்பகுதியை மயூர மன்னர் ஆண்டு வந்தபோது மதுராவுக்கு அருகில் சொன்க் என்ற இந்துக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்கிறார்கள். மொகலாய மன்னன் ஜஹாங்கீர் இங்கு படையெடுத்து வந்தபோது கிருஷ்ணன் கோயில்களையும், அதன் அற்புதத் தோற்றத்தையும் பார்த்து பிரமித்து, இங்கு வாழும் ஒரு சிறு பறவைக்கூட யாரும் தீங்கு செய்யக்கூடாது. என்று உத்தரவிட்டுவிட்டு போர் செய்யாமலேயே திரும்பிச் சென்று விட்டார். ஆண்டு முழுவதும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பகவத்கீதை படிக்கிறார்கள்.

சுவரிலும் பகவத்கீதை செதுக்கப்பட்டுள்ளது. கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணர் குஞ்சகாலி நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். மாலை வேளையில் கோயிலைச் சுற்றி ஏராளமான தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டு கோயில் ஒளிவெள்ளத்தில் மிதக்கும். அன்று நடைபெறும் ஆண், பெண் பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் காண்போரை வசீகரிக்கும். எங்கே இருக்கு? உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில், யமுனை நதிக்கரையில் விஷ்ராம் கட் என்ற ஸ்நான படித்துறை அருகே குஞ்சகாலி என்ற இடத்தில் துவாரகாதீஷ் என்ற கிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் மதுரா உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar