Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ... திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
10:02

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசி மக தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவில் மாசி மக தேர் திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி சுவாமி திருவீதி உலாவும், 26ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநாயகர், தீர்த்தகீரிஸ்வரர், வடிவாம்பிகை ஆகிய, மூன்று தேர்கள் மீது, முத்துக்கொட்டை, பொறி, மிளகு, உப்பு மற்றும் நவதானியங்களை தூவி வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, கோயிலைச் சுற்றி வந்து நிலை நிறுத்தினர். இரண்டாவதாக தீர்த்தகீரிஸ்வரர் தேரும், அதற்கடுத்து வடிவாம்பிகை தேரும் இழுத்து வந்து நிலை நிறுத்தப்பட்டது. விழாவில், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அரூர் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரூர் டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar