நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம் உதாரணமாக கோயில்களுக்கும் அந்தணர்களுக்கும் நாம் தருவதை தானம் என்று சொல்லலாம். நம்மைவிடத் தாழ்ந்தவர்களுக்கும், வறியவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை தர்மம் என்று சொல்லலாம்.
நெருப்பின் தர்மம் சுடுவது நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும் போது, இங்கு இயல்பு என்று பொருளிலேயே தர்மம் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தர், தார், என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லுக்குத் தாங்குதல் என்று பொருள். தானம் என்ற சொல், பொதுவாக நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல்- நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல், தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம்.