பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று, பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றுத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 2ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா, வரும் 20ம் தேதியும், திருக்கல்யாணம், 21ம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், தினமும் காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.