Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ... பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயிலில் மூன்று நாட்கள் விழா
எழுத்தின் அளவு:
கண்ணகி கோயிலில் மூன்று நாட்கள் விழா

பதிவு செய்த நாள்

25 மார்
2016
12:03

கூடலூர்: "கண்ணகி கோயிலில் மூன்று நாட்கள் விழா கொண்டாட அனுமதி கோரி, இடுக்கி கலெக்டரிடம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் மனு கொடுத்தனர். தமிழக- கேரள எல்லையில் வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக 15 கி.மீ., தூரத்திற்கு ஜீப் பாதையும், லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கி.மீ., தூரத்திற்கு நடைபாதையும் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று இங்கு விழா கொண்டாடப்படும். தமிழக- கேரள பக்தர்கள் அதிகம் செல்வர். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதியுண்டு. இதனால், தமிழகத்தின் நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயில் தரிசனத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை.

கலெக்டரிடம் மனு இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் இடுக்கி கலெக்டர் கவுசிகனிடம் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக- கேரள மக்கள் இணைந்து மங்கலதேவி கண்ணகி கோயிலில் அம்மனை தரிசனம் செய்து வருகிறோம். சென்னை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவார்கள். நீண்ட தொலைவில் இருந்து வந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் தரிசனம் செய்து திரும்ப முடியவில்லை.பல ஆண்டுகளுக்கு முன் வரை மூன்று நாள் விழா கொண்டாடப்பட்டு வந்தது. எனவே இந்த ஆண்டு மூன்று நாள் விழா கொண்டாட அனுமதி தரவேண்டும், என கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் இதுபோன்ற மனு தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar