Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னுார் அம்மன் கோவிலில் கரக ... புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்: திருஷ்டி சுற்றி வரவேற்பு!
எழுத்தின் அளவு:
கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்: திருஷ்டி சுற்றி வரவேற்பு!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
10:04

அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை வைகை ஆற்றில் இறங்கி விட்டு நேற்று காலை அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் மலர் துாவியும், பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர்.அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 18ல் துவங்கியது.மதுரைக்கு புறப்பட்டார்: விழா முக்கிய நிகழ்வான மதுரை வைகை ஆற்றில்இறங்க ஏப்., 20 ல் மாலை 5.00 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் நேரிக்கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.

ஏப்., 21ல் மதுரை சென்ற கள்ளழகரை மூன்றுமாவடி, அவுட்போஸ்ட் பகுதிகளில் பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். ஏப்., 22ல் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், காலை 6.05 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.மலைக்கு திரும்பினார்: பக்தர்களின் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல நிகழ்ச்சிகளில் கள்ளழகர் அருள்பாலித்தார். அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை 10.30 மணிக்கு கோயிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் மலர்கள் துாவி கோவிந்தா கோஷம் முழங்க வரவேற்றனர். 18 பேர் பூசணிக்காயில் சூடம் ஏற்றி கள்ளழகரை 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். இன்று(ஏப்., 27) உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை மற்றும் பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கலியாந்துார் குளத்தை துார்வாரும் பணியின் போது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar