Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுதர்சனம் பொருள் என்ன? நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்.. வருங்காலம் வசந்தமாகட்டும்! நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்.. ...
முதல் பக்கம் » துளிகள்
அரசியல் நல்வாழ்வுக்கு அம்பலவாணரை வணங்குங்க!
எழுத்தின் அளவு:
அரசியல் நல்வாழ்வுக்கு அம்பலவாணரை வணங்குங்க!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
12:04

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் விருதுநகர் மாவட்டம் முடுக்கங்குளத்தில் உள்ளது. அரசியல்வாதிகள் இங்கு வழிபட, சிறந்த எதிர்காலம் உருவாகும்.

ராவணன் மனைவி மண்டோதரி. இவள் கன்னியாக இருந்தபோது, திருமணத்தடை நீங்க அசுரகுரு சுக்ராச்சாரியாரை நாடினாள். தென்பாண்டி நாட்டிலுள்ள முடுக்கங்குளத்தில்  (நெருக்கமாக தாமரைகளைக் கொண்ட குளம்) இருக்கும் அம்பலவாணர் என்னும் நாமம் தாங்கிய சிவனை பூஜிக்கும்படி கூறினார். அதன்படி, மண்டோதரிதாமரைக்குளத்தில் நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள்.  சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்யாண விநாயகர்: கோயில் வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் கல்யாண விநாயகர் என்ற அழைக்கப்படுகிறார். வடக்கு முகமாக இருக்கும் இவர் கல்யாண வரம் தருபவராக அருள்கிறார். மண்டோதரி, தனது திருமணம் சிறப்பாக நடக்க அருள் பெற்றதால் இக்கோயில் கல்யாண தலமாக விளங்குகிறது. இவ்வூரில் உள்ள மக்கள், இந்தக் கோயிலில்  திருமணங்களை நடத்துகின்றனர். இங்குள்ள குளத்திற்கு சிவகாமி புஷ்கரணி என்று பெயர். இதைத் தவிர கோயிலுக்குள் சதுரமான கிணறு ஒன்றும்உள்ளது.

சூரியன் பூஜிக்கும் சிவன்: மாசி  சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது  சிறப்பானது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் சுவாமி சந்நிதி எதிரில் உள்ளது. சூரியதிசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் அம்பலவாணசுவாமியை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும், அரசியல்வாழ்வில் இடைஞ்சலைக் களைந்து முன்னேற விரும்புபவர்களுக்கும் இக்கோயில் வழிபாடு நன்மை தரும். இக்கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக  கூறுகின்றனர். அம்மன்சந்நிதிக்கு நேராக கோயில் கோபுரவாசலும், சுவாமி சந்நிதிக்கு நேராக பலகணியும் இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.  

ஆருத்ரா அபிஷேகம்: அம்பலவாண சுவாமியாக மூலவர் திகழ்வதால் மார்கழியில் திருவெம்பாவை வழிபாடு சிறப்பாக நடத்துகின்றனர். சுவாமி சந்நிதியில் நடராஜர், சிவகாமி அம்மன் வீற்றிருக்கின்றனர். பதஞ்சலி,வியாக்ரபாதர் உடனிருக் கின்றனர். ஆருத்ராநாளில் நடராஜருக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்து வழிபடுகின்றனர். கன்னிமூலை கணபதி இங்கு தலவிநாயகர்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar