Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசியல் நல்வாழ்வுக்கு அம்பலவாணரை ... ராகுதோஷம் நீங்க காளியை வணங்கும் முறை! ராகுதோஷம் நீங்க காளியை வணங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்.. வருங்காலம் வசந்தமாகட்டும்!
எழுத்தின் அளவு:
நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்.. வருங்காலம் வசந்தமாகட்டும்!

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
02:04

உலகையே வென்ற மாவீரர் அலெக்சாண்டர். அவர் உலகை ஜெயித்தது வீரத்தால் மட்டுமல்ல! இன்னொரு ரகசியமும் அவரது வெற்றிக்குப் பின் புதைந்து கிடக்கிறது. அலெக்சாண்டரை ஒரு பேரறிஞர் சந்தித்தார். மாவீரரே! உங்களுக்கு முன்பு இந்த தேசத்தை  ஆண்ட அரசர்கள் பலர் உங்களை விட வலிமை வாய்ந்த படைகளுடன் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், உங்களை விட பலமடங்கு பணமும் அவர்களிடம் கொட்டிக் கிடந்திருக்கிறது. ஆனால், அவர்களால் உலகை வெல்ல முடியவில்லை. நீங்கள் அவர்களை விட வலிமை குறைந்தவராயினும் உங்கள் வெற்றியின் ரகசியம் எனக்குப் புரியவில்லை. அதை வெளிப்படுத்துவீர்களா? என்றார். அலெக்சாண்டர் மென்மையாக ஒரு புன்முறுவலை உதிர்த்தபின் பதிலளித்தார். அறிஞர் பெருமகனாரே! இதில் ரகசியம் ஏதுமில்லை. எனக்கு இந்த வெற்றி கிடைக்க காரணமாக இருந்தவர் கடவுள் மட்டுமே! அவரது அருள்  பரிபூரணமாக எனக்கு கிடைத்தது. அதனால் நான் வென்றேன்.  

நான் வென்ற நாடுகளில், ஏற்கனவே இருந்த ஆட்சிகள் ஓரளவுக்கே நல்லாட்சியை  தந்தனர். மக்களின் எதிர்பார்ப்பு அந்த ஆட்சியாளர்களிடம் ஏராளமாக இருந்தது. அவற்றையெல்லாம் நான்  சிறப்பாக நிறைவேற்றினேன். மக்கள் யார் ஆள்கிறார்கள் என்பது பார்ப்பதில்லை.  தங்களைப் புரிந்து கொண்டு, தங்களுக்கு வேண்டியதைச் செய்யும் ஆட்சியாளர்களையே விரும்புகிறார்கள். அவ்வகையில், முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பான ஆட்சியையும், நிறைந்த வசதிகளையும் செய்து கொடுத்தேன். அந்த நாட்டு ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக, அவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் நான் நடக்கவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தேன். இதுவே நான் வெற்றிப்படிக்கட்டில் கால் வைத்த ரகசியம், என்றார், உலகெங்கும் நல்லாட்சி மலரட்டும். மக்களின் தேவை நிறைவேறட்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் மனநிலை மக்களிடம் வளரட்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar