Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் ... சிவன் சிலையாக காட்சி தரும் ‛கதவு மலை! சிவன் சிலையாக காட்சி தரும் ‛கதவு மலை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்முனீஸ்வரர் திருவிழா: 2 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் பலியிட்டு நேர்த்திக் கடன்!
எழுத்தின் அளவு:
செம்முனீஸ்வரர் திருவிழா: 2 ஆயிரம் ஆட்டுக்குட்டிகள் பலியிட்டு நேர்த்திக் கடன்!

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
11:04

அந்தியூர்: செம்முனீஸ்வரர் கோவிலில் நடந்த, குட்டிக்குடி திருவிழாவில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குட்டிகள் பலியிடப்பட்டன. அந்தியூரை அடுத்துள்ள பூனாச்சி அருகே பூசாரியூர் கிராமத்தில், செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, இக்கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கும். நடப்பாண்டு விழா கடந்த, 20ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடி திருவிழா நேற்று நடந்தது. பில்லி, சூன்யம், பேய், பிசாசு தொல்லையால் துன்பப்படுவோர் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களும் இங்கு அதிகம் வருகின்றனர்.

வேண்டுதல் நிறைவேறினால் ஆட்டுக்குட்டிகளை மட்டுமே பலி தர வேண்டும். பிறந்த குட்டி முதல், ஓராண்டு வரையிலான குட்டிகள் பலி தரப்படுகின்றன. இந்நிலையில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேற்று குவிந்தனர். குட்டிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள் பலியிடப்பட்டன. பலி தரப்பட்ட குட்டிகளின் ரத்தத்தை குடித்து, பூசாரிகள் ஆட்டம் ஆடினர். குழந்தை வரம் கேட்கும் பெண்கள், பலி தந்த குட்டிகளின் ரத்தத்தை, தங்களின் புடவைகளில் பூசிக்கொண்டனர். அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் கோபி, சத்தி, ஈரோடு மற்றும் சேலம், கோவை, திருப்பூர் நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar