திண்டுக்கலிலிருந்து பழநி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு தான் முருகனுக்கு மிட்டாயை பிரசாதமாக செலுத்துகின்றனர். ஒருசமயம் பக்தர் ஒருவர் பிள்ளை வரம் வேண்டு முருகனை தரிசித்துச் சென்றார். அடுத்த ஆண்டே அவருக்குக் குழந்தை பிறக்க உறவினர்களுக்கு மிட்டாய் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்றிரவே அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி, எனக்கு மட்டும் மிட்டாய் கிடையாதா? என்று ஏக்கமாக கேட்டார். அடுத்த நாளே அந்த பக்தர் முருகனுக்கு மிட்டாய்களை நிவேதித்தார். அன்றிலிருந்து இன்று வரை அர்ச்சனை, அபிஷேகம் எல்லாமே மிட்டாய், சாக்லேட்டுகளைக் கொண்டே வழிபடுகின்றனர். பிரசாதமாகவும் இவையே வழங்கப்படுகின்றது.