வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு சமஸ்கிருதத்தில் வைசாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழில் வைகாசி’ என்று மாறியது. இந்த பவுர்ணமி நன்னாளையே வைகாசி விசாகம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். முருகப்பெருமான் அவதாரம் இந்நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. விசாகத்தில் அவதரித்ததால் விசாகன்’ என்று முருகனுக்குப் பெயருண்டு. வி’ என்றால் பறவை’ (மயில்), சாகன்’ என்றால் சஞ்சரிப்பவன்’. மயில் மீது வலம் வரும் இறைவன் என்பது பொருள். முருகனால் சம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி மயிலாக மாறியது. அதையே முருகன் தனது வாகனமாக ஏற்றார். முருகன் கோவில்களில் பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபடுவர்.