Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயருக்கு வெண்ணெ, வடை மாலை ... குபேரருக்கு கீரி ஏன்? குபேரருக்கு கீரி ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதி மலை ஏறும்போது கூற வேண்டிய சுலோகம்!
எழுத்தின் அளவு:
திருப்பதி மலை ஏறும்போது கூற வேண்டிய சுலோகம்!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2016
05:06

திருமலையைக் கண்டதுமே ஸ்ரீராமானுஜரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அதனை அவர் நெடுநேரம் கண் கொட்டாமல் பார்த்தார்; அவரது கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர் நினைத்தார்; எம்பெருமான் திருமகளுடன் நித்தியவாசம் செய்யும் புனிதத்தலம் இது. ஆகா! என்னே இந்த மலையின் தெய்விக எழில்! பூமியின் திரண்ட எல்லாப் பண்புகளுமே இந்த மலையுருவம் கொண்டுள்ளன. பெருமதிப்பு வாய்ந்த இந்தத் திருமலையில் திருமகளும் நாராயணனும் வாழ்கிறார்கள். எனது பாவ உடலைக் கொண்டு இதன் மீது மிதித்து ஏறி, இதை அசுத்தப்படுத்த மாட்டேன். இங்கிருந்தே இதைப் பார்த்துப் பார்த்து, என் உடலையும் மனதையும் தூய்மையுறச் செய்து பேறு பெறுவேன். இப்படி எண்ணி, அவர் திருமலையின் அடிவாரத்திலேயே தங்கினார். பக்தர்கள் பலவாறு வேண்டிக் கேட்ட பிறகு அவர் மலையேறி பெருமாளை மனம் குளிரத் தரிசித்தார்.

அத்தகைய திருமலையில் ஏறும்போது கூற வேண்டிய சுலோகம் இது:

ஸவர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேஸத்யா தயயா பாபசேதஸ:
த்வன்மூர்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வேங்கட மலையை வந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கமயமானதும், அளவு கடந்த புண்ணியமுள்ளதும், எல்லாத் தேவர்களாலும் சேவிக்கப்பட்டதும் ஸ்ரீநிவாசனுக்கு இருப்பிடமுமான ஹே மலையே! தங்கள் மீது கால்களை வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே, அதனால் ஏற்படும் எனது பாவத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். தங்களது சிகரத்தில் வசிக்கும் லக்ஷ்மீபதியான ஸ்ரீவேங்கடேசப் பெருமானைத் தாங்கள் எனக்குத் தரிசனம் செய்து வைக்க வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar