Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு ... கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்பேட்டையில் மீட்கப்பட்ட சிலைகள் திருவொற்றியூர் கோவிலில் ஒப்படைப்பு!
எழுத்தின் அளவு:
ஆழ்வார்பேட்டையில் மீட்கப்பட்ட சிலைகள் திருவொற்றியூர் கோவிலில் ஒப்படைப்பு!

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2016
10:06

சென்னை: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளின், சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில், 49 சிலைகள், நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளுக்கு சொந்தமான பங்களாவில், கோவில்களில் இருந்து திருடப்பட்ட, 285 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன. சிலைகள் திருடுபோன கோவில்களில் உள்ள செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், பூசாரிகள், தலைவர்கள், சென்னை வரவழைக்கப்பட்டு, சிலைகள் பார்வையிடப்பட்டன. அதில், பிரம்மா சிலை தவிர மற்ற சிலைகளை, அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து, தீனதயாள் பங்களாவில் மீட்கப்பட்ட சிலைகள், நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் உள்ள, திருமேனி அரசு காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டன. சிலைகளை, சிலை தடுப்பு காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி, வடிவுடையம்மன் கோவில் உதவி கமிஷனர் லதாவிடம் ஒப்படைத்தார். இந்த சிலைகளில், மூன்று அடி உயரம் கொண்ட கருடன் சிலை, 7 செ.மீ., உயரம் கொண்ட அம்மன் சிலை, விநாயகர், புத்தர், பெருமாள், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட, பல்வேறு கடவுள்களின் ஐம்பொன் சிலைகளும் காணப்பட்டன. சிலைகள் அனைத்தும், கோவிலில் உள்ள உலோக சிலைகள் திருமேனி பாதுகாப்பு அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு ஏற்கனவே, ஏராளமான ஐம்பொன் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar