Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் இல்லையேல் சக்தி இல்லை ... வீட்டின் வாசலில் சிறிய வேல் வைத்து வழிபாடலாமா? வீட்டின் வாசலில் சிறிய வேல் வைத்து ...
முதல் பக்கம் » துளிகள்
உடனடி பலன் தரும் சுந்தர காண்டம்!
எழுத்தின் அளவு:
உடனடி பலன் தரும் சுந்தர காண்டம்!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
04:07

வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கம்கொண்டது. இதைப் படித்தால் வாழ்வில் நிம்மதி,தைரியம் ஏற்படும். திருமணமாகாத  பெண்களுக்குசிறந்த கணவன் அமைவார். நீண்ட கால நோய் நீங்கும்.தினமும் இதை முழுமையாகப் படிப்பது சிரமம்.எனவே, சுந்தரகாண்ட பாரா யணத்தை தினமும் படித்த பலன் பெற, இதோ... இந்த எளிய பாடலைப் படியுங்கள்.சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும்  சொர்க்கம் என்று மனதில் கொள்வார்கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்னகருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது!  அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவேஆயத்தமாகி நின்றான். அனைத்து வானரங்களும்  அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்விடை  கொடுத்து வழியனுப்பினரே!வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!மைநாக பர்வதம் மா ருதியை உபசரிக்கமகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்துசுரசையை வெற்றிகண்டு ஹிம்சை வதம் செய்துசாகசமாய் சமுத்திரத்தை  தாண்டியே இலங்கை சேர்ந்தான்.இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.அழகான  இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்  சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.ராவணன் வெகுண்டிட, ராட்சஷியர் அரண்டிடவைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க!கணைய õழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லிசூடாமணியைப் பெற்றுக்கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல்  கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் பெயர் சொல்லவெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்!  வைத்த நெருப்பினால் வெந்ததேஇலங்கை நகர்.. அரக்கனின் அகந்தையை அழித்திட்டஅனுமானும், அன்னை ஜானகியிடம்அனுமதி பெற்றுக்  கொண்டுஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான் அன்னையைக் கண்டுவிட்டஆனந்தத்தில் மெய் மறந்த அவன்ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த  ஸ்ரீராமனிடம் கண்டேன் சீதையை என்றான்.வைதேகி வாய்மொழியை அடையாளமாய் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்நேயர் சூடாமணியை க்கொடுத்தான். மனம் கனிந்த மாருதியை மார்போடு அணைத்து ஸ்ரீராமர் மைதிலியைசிறை மீட்க சித்தமானார்.ஆழ்கடலில் அற்புதமாய் அணை  கட்டி படைகள் சூழஅனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டார்அழித்திட்டான் ராவணனை ஒழித்திட்டான்அதர்மத்தை! அயோத்தி சென்ற  ஸ்ரீராமர்அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்அடைந்தோர்க்கு அவன் அருள் என்றும் உண்டுஎங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே,  அங்கேசிரம் மேல் கரம் குவிந்து மனம் உருகி நீர் சொரிந்துஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!  உன்னைப் பணிகின்றோம்பன்முறை  உன்னை பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar