நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2016 10:07
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சத்திரம்: மேட்டுப்பாளையம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.