Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி ... திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆறு மணி நேரம் மூடல்! திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆறு மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
10:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவரூபமான நடராஜருக்கு ஆண்டுக்கு, ஆறு முறை மட்டுமே அபி ?ஷகம் நடைபெறும். இதில், முக்கிய விழாவாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், கார்த்திகை தீப மை பிரசாதம் நடராஜருக்கு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு திருமஞ்சனம் சாத்தப்பட்டு, நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்மன் ஆயிரங்கால் மண்டபத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கும். ஆனி திருமஞ்சன விழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று திருமஞ்சனம் சாத்தும் விழாவை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம் நடத்தப்பட்டது. பின், நடராஜர் சமேத சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக சுவாமி, அம்மன் வெளியே வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 16ம் தேதி காலை, மாலை என, இரு வேளைகளிலும் சுவாமி மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar