Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகநாதர் பெருமாள் கோவில் திருபணிகள் ... வடமதுரை பெருமாள் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றம் வடமதுரை பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் கும்பாபிேஷகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் கும்பாபிேஷகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
11:07

உடுமலை: பல ஆண்டுகளுக்கு பின்பு நடந்த கரட்டுமடம் மலைக்கோவில் கும்பாபிேஷகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உடுமலை அருகே கரட்டுமடத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ளது, அனுமந்தராயர் மற்றும் சஞ்சீவ பெருமாள் கோவில். கற்றளியாக அமைந்த கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் கோபுரங்கள் கட்டப்பட்டன. பின்னர் தளி பாளையக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பின்றி, புனரமைக்கப்படாமல் கோவிலின் சிறப்பு மங்கத்தொடங்கி, பரிதாப நிலையில் காணப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலை, நீண்ட இடைவெளிக்கு பின்பு சுற்றியுள்ள, 75க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பணி முடிந்து, கும்பாபிேஷக விழா கடந்த 9ம் தேதி மாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கியது.

நேற்று காலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் கும்பிேஷக பூஜைகள், யாகசாலை திருவாராதனம், பால் தீர்த்தம், நான்காம் கால பூஜை மற்றும் பூர்ணாகுதி நான்காம் காலம் நிறைவு பூஜை நடந்தன. காலை, 6:00 மணிக்கு விமான கலசம், மூலவர் மற்றும் பரிவார திருமேனிகளுக்கு மஹா சம்ப்ரோஷனம், மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு, தசதரிசனம், தசதானம், பெருமாள், தாயார்களுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் புறப்பாடு நடந்தது. கும்பாபிேஷகத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்தை காணவரும் பக்தர்களை ஒழுங்கப்படுத்த போலீஸ் பாதுகாப்பும், பக்தர்களின் பாதுகாப்புக்காக, எரிசனம்பட்டி அரசு மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளும், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar