பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மண்டகபடிதாரர் சரவணமூர்த்தி மற்றும் உடையாம்பட்டி கிராம மக்கள், கொடிப்படத்தை வடமதுரை ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு வந்தனர். கொடிமரம் முன்பாக ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப் பெருமாள் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடியேற்றம் நடந்தது. 13 நாள் திருவிழாவில் நாள்தோறும் இரவு 9 மணியளவில் அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 17ல் திருக்கல்யாணம், ஜூலை 19ல் திருத்தேரோட்டம், ஜூலை 21ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன். பொதுமக்கள் செய்து வருகின்றனர்.