Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோவில் ... பாப்பம்மாள் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகணபதி கோவிலில் கோடி அர்ச்சனை நிறைவுவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
12:07

சேலம்: ராஜகணபதி கோவிலில், நேற்று கோடி அர்ச்சனை நிறைவுவிழா நடந்தது. சேலம், தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், ஜூன், 9ம் தேதியன்று, கோடி அர்ச்சனை விழா துவங்கியது. அன்று முதல், தினமும் ராஜகணபதிக்கு, மூன்று லட்சம் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. கடந்த, 6ம் தேதியுடன், கோடி அர்ச்சனை நிறைவுபெற்றது. இந்த நிலையில், அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், நேற்று காலை, 1,008 கலச அபிஷேகம் மற்றும் மகா புஷ்பயாகம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், பூக்களை ஊர்வலமாக கொண்டு வந்து, விநாயகருக்கு சமர்ப்பித்தனர். சிறப்பு அர்ச்சனை மற்றும் அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடந்தது. மதியம், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. பின், சத்தாபரண ஊர்வலம் நடந்தது. அதில், சிவ பார்வதியிடம், மாம்பழம் பெற, சுற்றி வரும் காட்சி, கீதாசார ரதத்தை வலம் வரும் காட்சி, அன்னபட்சி வாகனத்தில் ராஜகணபதி அருள்பாலிக்கும் காட்சி என மூன்று வாகனங்களில், தத்ரூபமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு பின் செய்யப்பட்டிருந்த, இந்த அலங்காரம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar