Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை கோயில்களில் ... காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
12:07

திருப்புத்துார்: திருப்புத்துார் தென்மாப்பட்டு மூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 9ல் யாகசாலை பூஜை துவங்கியது. மதுரை வேலாயுதபட்டர் (எ) சிவக்குமார் பட்டர் தலைமையில் பூஜைகள் துவங்கியது. நேற்று நான்காம் கால யாகபூஜை ,வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சிவாச்சார்யார்கள் யாகசாலையிலிருந்து கடத்துடன் விமான,கோபுரங்களுக்கு சென்றனர். காலை 9.20 மணிக்கு விமான கலசங்களுக்கு யாகசாலை புனிதநீரால் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்து, அலங்கார தீபாராதனை நடந்தது. திருப்பணிக்கான ஏற்பாடுகளை அஜூந்தா குரூப்ஸ் எம்.சரவணக்குமார்-ராகினி, எம்.ரமணன்-லில்லி மற்றும் அனைத்து ஊர் பங்காளிகள், திங்களூர் ஸ்ரீமூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி(சப்தமாதா) ஆலய அறக்கட்டளையினர் செய்தனர்.

மானாமதுரை: மிளகனுார் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மிளகனுார் வரசித்தி விநாயகர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன. கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகளை தெய்வசிகாமணி பட்டர் தொடங்கி வைத்தார்.நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை தொடங்கின. காலை 9.55 மணிக்குகோயில் கோபுரத்தை கருடன் வட்டமிட கும்பத்தில் புனித நீர் ஊற்றி பூலன்குறிச்சி அம்பி பட்டர், பரத்வாஜ் பட்டர் நடத்தினர்.ஏற்பாடுகளை மிளகனுார் கிராமமக்கள் செய்திருந்தனர்.

திருப்புவனம்: திருப்புவனம் ஆனந்த அய்யப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. திருப்புவனத்தில் இருந்து வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதமிருந்து சென்று வருகின்றனர். வருடம் முழுவதும் அய்யப்பனை தரிசனம் செய்ய திருப்புவனம் புதுாரில் ஆனந்த அய்யப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் அதிகாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9.50 மணிக்கு குருநாதர் போஸ் சுவாமி தலைமையில் கோவை பாலசிவாத்மஜன் சிவாச்சார்யார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். காலை கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆனந்த அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை திருப்புவனம்புதுார் ஆனந்த அய்யப்பன்சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar