பதிவு செய்த நாள்
15
ஜூலை
2016
11:07
திருவள்ளூர்: திருவள்ளூர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, பால் அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், உள்ள தட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குருபகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.