சமயபுரம் மாரியம்மனுக்கு பங்குனி 17ல் இருந்து சித்திரை 13வரை தொடர்ந்து 28 நாள் உணவு படைப்பதில்லை. இந்த நாட்களில் அம்பாள் பக்தர்களின் நன்மைக்காக உபவாசம் (விரதம்) இருப்பதாக ஐதீகம். இந்நாட்களில் இளநீர், மோர் ஆகியவை மட்டுமே படைக்கப்படும். இந்த கோவிலை 1706ல் துவங்கி 26 ஆண்டுகள் கட்டினர். 1732ல் திறக்கப்பட்டது. விஜயரங்க சொக்கநாத நாயக்கர் இதைக் கட்டினார்.