கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவாலயங்களில் பள்ளியறை பூஜையின் போது பாடப்படும் திருப்பொன்னூஞ்சல் பாடல் இது. இதை மாணிக்க வாசகர் உத்தரகோசமங்கையில் பாடியுள்ளார். திருப்பொன்னூஞ்சல்சீரார் பவளங்கால் முத்தம் கயிராகஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்துநாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்குஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கைஆரா அமுதின் அருள்தாள் இணைபாடிப்போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோமூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாதவான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள்தேன்தங்கி தித்தித்து அமுதூறித் தான் தெளிந்தங்குஊன் தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைகோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்சைபோன்றங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோமுன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம்பன்னூறு கோடி இணையோர்கள் தாம்நிற்பத்தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்துமன்னூறு மன்னுமணி உத்தர கோசமங்கைமின்னேறு மாட வியன்மாளிகை பாடிப்பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோநஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கைஅஞ்சொலன் தன்னோடும் கூடி அடியவர்கள்நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை செய்துதுஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம்நாணமே உய்ய ஆட்கொண்டு அருளிநஞ்சுதனைஊணாக உண்டருளும் உத்தரகோச மங்கைக்கோணார் பிறைச்சென்னீக் கூத்தன் குணம்பரவிப்பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோமாதாடு பாகத்தன் உத்தரகோச மங்கைத்தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்தீதோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான்காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோஉன்னற்கு அரியதிரு உத்திரகோசமங்கைமன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழேபன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்அன்னத்தின் மேலேறி ஆடு மணிமயில்போல்என்னைத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோகோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்துஞால மிகப்பரிமேல் கொண்டு நமையாண்டான்சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கைமாலுக்கு அரியானை வாயார நாம்பாடிப்பூலித்து அகம் குழைந்து பொன்னூசல் ஆடாமோதெங்குலவு சோலைத் திருவுத்திரகோசமங்கைதங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளிஎங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்பங்குலவு கோதையும் தானும் பணிகொண்டகொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப்பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.திருச்சிற்றம்பலம்