திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்.எம்.ஈ.எஸ். காலனியில் உள்ளது. சித்தி விநாயகர் கோயில். தை மாத வெள்ளிக்கிழமைகளில் பல நூறு பெண்கள் கலந்துகொள்ளும் குத்து விளக்கு பூஜை வெகு பிரசித்தம். விநாயகருக்கு அபிஷேகம் செய்து தரும் பாலை அருந்தினால் ஆரோக்கியமான வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை.