Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோவிலில் திருவோணம் ... உலக நன்மைக்காக 100 மணி நேர நாம ஸங்கீர்த்தனம்! உலக நன்மைக்காக 100 மணி நேர நாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரியில் வண்ணமயமான ஓணம் பண்டிகை!
எழுத்தின் அளவு:
நீலகிரியில் வண்ணமயமான ஓணம் பண்டிகை!

பதிவு செய்த நாள்

15 செப்
2016
11:09

பந்தலுார்: நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரியில் உள்ள பந்தலுார், கூடலுார்  பகுதிகள், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இப்பகுதிகளில் அதிகளவில் மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இங்குள்ள  மக்களால், நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள பொன்னானி மகா விஷ்ணு கோவில், எருமாடு மற்றும் வெள்ளேரி  சிவன் கோவில், எருமாடு விஷ்ணு கோவில், வாளாட்டு சிவன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், வீடுகளின்  முன்பாக பூக்கோலம் போட்டு, குழந்தைகளும், பெண்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* ஊட்டி ஐயப்பன் கோவிலில் காலை,6:30 மணிமுதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் முகப்பு பகுதியில், வண்ணமயமான கோலமிடப்பட்டி ருந்தது. இதனை, உள்ளூரில் வசிக்கும் மலையாள மக்கள் பூக்களால் உருவாக்கினர். நீலகிரியில் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந் ததால், உள்ளூர் மக்களும், தங்கள் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப் பட்டது.

* கேரள மாநில மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை, மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் மலையாளி மக்களால்  கொண்டாடப்பட்டது. உள்ளூரில் உள்ள நண்பர்களுக்கு,‘ஓணம் சத்யா’ எனப்படும் விருந்து அளிக்கப்பட்டது. மஞ்சூர் ‘பென்ஸ்டாக்’ உட்பட சில  காட்சி முனை பகுதிகளில், கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

*கோத்தகிரியில், மலையாள மக்கள் வசிக்கும் வீடுகளில் வ அத்தப்பூ கோலமிட்டு, மாவேலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.  குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடி, புத்தாடை அணிந்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். பின்பு,நண்பர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar