பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபி ஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.