Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துவங்கியது முத்தாலம்மன் கோயில் ... சோலையப்பர் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரித்திர சான்றுகளுடன் விளக்கம் தரும் நவராத்திரி கொலு கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2016
12:10

தேனி: தீய குணங்களை அழித்து வெற்றி பெற வைக்கும் விஜய தசமி நிகழ்ச்சியை உலக சரித்திரங்களுடன் ஒப்பிட்டு விளக்கும் ஆன்மிக கொலு பொம்மை கண்காட்சி காண, தேனியில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நவராத்திரி கொலு உற்சவம் அக்.,2ம்தேதி துவங்கி 11ம்தேதி விஜயதமியுடன் நிறைவு பெறுகிறது. கோயில்கள், ஆன்மிக அமைப்புகள், பல இல்லங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்தி இறைஅருள் பெருகின்றனர்.

தேனி என்.ஆர்.டி.ரோடு, பிரஜாபதி பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஷ்வா வித்யாலயா அமைப்பின் சார்பில் உலக சரித்திர நிகழ்வுகளுடன் விளக்கும் ஆன்மிக கொலு கண்காட்சி நடந்து வருகிறது. தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை கொலு காண பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆன்மிக விபரம், உலக நடப்பு விஷயங்களை கற்றுத் தரும் வகையில் கொலு அமைத்துள்ளனர். நவராத்திரி சிறப்பு குறித்து அதன் நிர்வாகி விமலா கூறுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த உலகம் சொர்க்கமாக இருந்தது. லட்சுமியை செல்வத்திற்காகவும், மகாலட்சுமியை உள்நோக்கிய தீய சக்திகளை அழிக்கவும், சரஸ்வதி ஞானசக்தியாக வழிபட்டனர். மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து துர் குணங்களை நீக்க கூடியவராக துர்க்கையாக விளங்குகிறார். இச்சாசக்தி,கிரியா சக்தி, ஞானசக்தி தேவதைகளாக வழிபடுகின்றனர்.

விஜயதசமி என்பது விஜய என்றால் வெற்றி, தசம் என்றால் பத்து குணங்களையும் அழித்து வெற்றி அடைவதாகும். இதற்காகவே நவராத்திரி கொண்டாடுகின்றோம். இந்த உலகம் தெய்வீக குணத்தால் சொர்க்கமாக இருந்தது. அது நரகமாக மாறி வருகிறது. சொர்க்கமாக இருந்த உலக ராமராஜ்யமாகவும், நரக உலகத்தை ராவண ராஜ்யமாக கூறுகின்றனர். நம்மை அறியாமல் பக்தி செய்தோம்: மகான்களையும், தர்ம தேவதைகளையும் சிலைகளாக வைத்து வழிபடுகிறோம். ஒவ்வொரு மனிதரிடமும் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை தலைதுாக்கியுள்ள உலகத்தை ராவண ராஜ்யம் என்கின்றனர். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மை அறியாமல் பக்தி செய்தும், தேவர்களை அறியாமலே கொண்டாடினோம். கடவுள் பிரம்மா குமாரிகள் மூலம் அறியாமையில் இருக்கும் மக்களை விழித்து கொள்ள எச்சரித்துள்ளார். இதனால் மறுபடியும் உலகம் சொர்க்கமாக போகிறது. தர்மத்தை நிலை நாட்ட வந்த பிரம்மா அதனை விளக்கும் வகையில் சக்தியுகம், திரேதாயுகம் கடந்து துவாபரயுக பக்தி ஆரம்பிக்கிறது. உலகம் தெய்வீக தன்மையில் இருந்து மனித தன்மையாகிறார்கள். கலியுகத்தால் உலகில் அதர்மம் அதிகரித்து விட்டது. கீதையில் கூறியது போல் அதர்மம் எப்பொழுதெல்லாம் தலைதுாக்குகிறதோ அப்போது தர்மத்தை நிலைநாட்ட நானே வருவேன் என பிரம்மா தர்மத்தை நிலைநாட்ட வந்து விட்டார். அதனை சரித்திர சான்றுகளுடன் நிரூபிக்கவே இந் நவராத்திரி கொலு,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar