சரஸ்வதி பக்தரான ஒட்டக்கூத்தர், நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக திருவாரூர் மாவட்டம் கூத்தனுõரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியைச் சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து அவர் பேரறிவும், ஞானமும் பெற்றார். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனுõர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரது பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ‘கிழத்தி என்பதற்கு ‘கிழவி என்றும், ‘தலைவி என்றும் பொருளுண்டு. வாக்குக்கு (சொல்) தலைவி என்பதால், இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். வடமாநிலங்களில் சரஸ்வதியை ‘வாக்தேவி என்பர்.