கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2016 09:10
கடமையுணர்வுடன் பணியாற்றும் கன்னி ராசி அன்பர்களே!
சுக்கிரன்,சனி,கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் இருப்பதால் முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த பிறகே செயல்படுத்துவது நல்லது. கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொன், பொருள் சேர வாய்ப்புண்டு. குடும்பத்தில் புதனால் மனக்குழப்பம், வீண் பிரச்னை ஏற்படலாம். ஆனால், அக். 18க்கு பிறகு மறையும். ஆடம்பர எண்ணம் மேலோங்கும். அனாவசிய செலவைக் குறைப்பது நல்லது. சுக்கிரனால் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். குறிப்பாக அக்.27,28,29ல் அவர்களால் நன்மை கிடைக்கும். நவ.1,2,3ல் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெறலாம். அக்.23, 24ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவியும் கிடைக்கும். ஆனால் நவ.4,5ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சூரியனால் கடந்த மாதம் இருந்த அலைச்சலும் சோர்வும் இனி இருக்காது. அக்.25க்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
தொழில், வியாபாரத்தில் சனி பகவான் தொழில் வளர்ச்சியைத் தந்து கொண்டு இருக்கிறார். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும். மறைமுகப் போட்டி, இடையூறுகள் அவ்வப்போது வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் உண்டாகாது. நவ.9,10ல் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். நவ.3க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி பெறுவர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். வேலைப்பளுவைச் சந்தித்தாலும் அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். தனியார் துறையில் இருப்பவர்கள் சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். அரசு ஊழியர்கள் அக்.21,22ல் சிறப்பான பலனைக் காணலாம். பணியிடத்தில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். இடமாற்ற பீதி அக்.18க்கு பிறகு மறையும். நவ.3க்கு பிறகு அரசு பணியாளர்கள் வேலையில் அக்கறையுடன் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறுவதில் தாமதம் உண்டாகும். அக்.25க்கு பிறகு நிலைமை சீராகும். நவ.6,7,8ல் வீண் குழப்பம் உருவாகலாம் கவனம்.க்ஷ
மாணவர்களுக்கு படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. விடாமுயற்சி இருந்தால் போட்டியில் வெற்றி பெற முடியும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் வரும். புதிய சொத்து வாங்க மாத தொடக்கத்தை பயன் படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரத்தில் ஓரளவு நன்மை உண்டாகும்.
பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். அக்.18க்கு பிறகு சிலருக்கு குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். பொறுமையுடன் விட்டு கொடுத்து போகவும். நவ.11,12 சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவ.8க்கு பிறகு உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 21,22,23,24,27,28,29 நவ.1,2,3,9,10,11,12 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மேஷ ராசியில் சந்திரன் அக். 17,18, நவ.13,14 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: புதன் கிழமை குலதெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். வெள்ளியன்று சிவன் கோவிலில் தீபமேற்றி வழிபடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »