Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி ... சிதைந்து சின்னாபின்னமாகும் பாரம்பரிய சின்னங்கள்! சிதைந்து சின்னாபின்னமாகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்க முடிவு
எழுத்தின் அளவு:
நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்க முடிவு

பதிவு செய்த நாள்

24 நவ
2016
12:11

திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புதிய கொடி மரம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 62ம் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், அகிலவல்லி தாயாருடன், மூலவர் ஆதிவராக பெருமாள்; கோமளவல்லி தாயாருடன், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஆகியோர் வீற்றுள்ளனர். திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக பிரசித்திபெற்றது. இக்கோவிலை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை வழிபாட்டு அடிப்படையிலும், இந்திய தொல்லியல் துறை, பாரம்பரிய கோவில் அடிப்படையிலும் நிர்வகித்து வருகின்றன. அறநிலையத்துறை சார்பில், 2006ம் ஆண்டு, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.

இந்நிலையில், கோவில் சுவர் உள்ளிட்டவற்றை ரசாயன பூச்சு மூலம் துாய்மை, மகா மண்டப மேல்தள சீரமைப்பு என, தொல்லியல் துறை பணிகள் மேற்கொண்டதால், அப்பணிகளை திருப்பணியாக கருதி, 2014 டிசம்பரில் பாலாலயம் செய்யப்பட்டது. இப்பணிகள் முடிந்ததும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ள அறநிலையத்துறை, புதிய கொடி மரம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கொடி மரம், 12 ஆண்டுகளுக்கு முன், சரியாக உலர வைக்கப்படாமல், ஈரத்தன்மையுடன் அமைக்கப்பட்டது. நாளடைவில் மரம் உலர்ந்து, அதன் சுற்றளவு சுருங்கி, ஆகம குறைபாடாக மாறியது. இக்குறையை தவிர்க்க, புதிய கொடி மரம் அமைக்க முடிவெடுத்துள்ள அறநிலையத்துறை, 50 அடி உயரம், 5 - 7 அடி சுற்றளவு கொண்ட, முற்றிலும் உலர்ந்த, கேரள வன தேக்குமர கட்டையை எதிர்பார்த்து உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar