ஹோமத்தை மணி மந்திர ஔஷதம் என்று சொல்வார்கள். உடல், மனம் சார்ந்த நோய், கிரக பாதிப்பு, செய்வினை, தோஷம் முதலியவற்றை போக்கி நன்மை உண்டாக முன்னோர்களால் கையாளப்பட்டதே ஹோமம். ஹோமம் என்பது மந்திரம், ஔஷதம் என்னும் மருத்துவ மூலிகை இணைந்த ஒன்றாகும். இந்தப் புகையை சுவாசிப்பதால் எல்லா பாதிப்புகளிலிருந்தும் விடுபட்டு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.