சுப்ரமணிய ஷோடச நாமாவளியில் ஓம் ப்ரம்மசாரிணே நம: என்று வருகிறது. முருகனை ப்ரம்மசாரி என்பது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2016 05:12
முருகன் பிரம்மசாரியாக இருந்து சூரனை அழித்த பிறகே தேவசேனா, வள்ளியை மணம் புரிந்தார். பழநியில் ஆண்டிக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பதற்காக அவரை அப்படியே மட்டும் வழிபடாமல் இரு தேவியரோடு திருமணக்கோலத்திலும் வழிபடுகிறோம் அல்லவா? விநாயகரும் இப்படித் தான். பிரம்மசாரியாகவும், வல்லபை கணபதியாகவும் வழிபடப்படுகிறார். இன்னொரு விஷயம். சுப்ரமணியருடைய ஷோடச நாமாவளியில் இடம் பெற்றிருப்பதை பிரம்மசாரி என்று பொருள் கொள்ளக்கூடாது. அது பிரம்ம சாஸ்தா. அதாவது ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனைத் தண்டித்தவர் என்று பொருள்.