Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம்! அள்ளித் தரும் ஆஞ்சநேயர்! அள்ளித் தரும் ஆஞ்சநேயர்!
முதல் பக்கம் » துளிகள்
மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?
எழுத்தின் அளவு:
மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

பதிவு செய்த நாள்

24 டிச
2016
04:12

மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர்  லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “ அம்மா! உனக்கேது தங்க காசுமாலை... காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார், என்று கேட்டார். அதற்குப் பெரியவர்,“நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன், என்று பதிலளித்தார். திகைப்புடன் பாட்டி,“ ஏழையான நான் எப்படி  காசுமாலை செய்ய முடியும்? என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும் என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார். கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி தெரிவித்தார். அவர்கள் காஞ்சிபுரம் போய் பெரியவரிடமே இதுபற்றி விளக்கம் கேட்டு விடுவோமே என்றனர். அதுவும் சரி தான் என்ற பாட்டி, அவர்களுடன் காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்தார். தன் கனவு பற்றி தெரிவித்தார். பெரியவர் பாட்டியிடம், “காசுமாலை செய்ய ஆயிரம் காசுகள் வேணும். அம்பிகையின் ஆயிரம் திருநாமத்தையும்  காசுக்கு ஒரு பெயராகப் பொறிக்கணும். ஒரு காசு அரை கிராம் வீதம் செய்தாலும்  500 கிராம் தேவைப்படுமே! என்ன செய்யப் போகிறாய் என்றார்.

அப்போது பாட்டியுடன் வந்த பெண்களில் ஒருவர். தான் அணிந்திருந்த  தங்க வளையல்களை நன்கொடையாக  அளித்தார். இதுபற்றிய தகவல் வெளியே தெரிந்ததும் நடிகர் ஆர்.எஸ்.மனோகர், மேயர் ராமநாதனின் மனைவி லட்சுமி, உம்மிடி பங்காரு கண்ணன்  போன்றவர்கள் பாட்டிக்கு உதவ முன் வந்தனர். விரைவில் காசுமாலை தயாரானது. பாட்டி உள்ளிட்ட மயிலாப்பூர் பக்தர்கள்  காஞ்சிபுரம் வந்தனர். ஒரு  கூடையில் பழம், பூ, மஞ்சள், ரவிக்கை இவற்றுடன் காசு மாலையையும் வைத்து  பெரியவரிடம் வழங்கி ஆசி பெற்றனர். அப்போது  ஒரு பெண் குழந்தை பெரியவர் முன் வந்தது. அவரிடம்  பழம் ஒன்றைப்  பெற்றுக் கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் மறைந்தது. வந்தது அம்பாள் தான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். இதைக் கண்டு வியந்த பக்தர்கள் மயிலாப்பூர் புறப்பட்டனர். ஒரு நல்ல நாளில் கற்பகாம்பாளுக்கு காசுமாலை சாத்தி பரவசத்துடன் வழிபட்டனர்.  அப்போது கூட்டத்தைக் கடந்து ஒரு பசுமாடு சன்னிதிக்கு வந்தது. அம்பாளைக் கண் குளிர தரிசித்தபின் வந்த வழியே புறப்பட்டது.  வியப்பில் ஆழ்ந்த பாட்டி உள்ளிட்ட பக்தர்கள் காஞ்சிபுரம் சென்றனர் பெரியவரிடம் நடந்ததை சொல்ல, அவர் நான் தான் கோ ரூபத்தில் (பசு வடிவில்) மயிலாப்பூர் வந்தேன், என்று தெரிவித்தார்.  இதைக் கேட்ட பக்தர்களுக்கு ஆனந்தக்கண்ணீர் பெருகியது. கனவில் தோன்றியது முதல் பசு வடிவில் சன்னிதிக்கு வந்தது வரை அனைத்தும் காஞ்சிப் பெரியவரின் லீலை  என்பதை உணர்ந்த பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar