Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குவியும் பக்தர்களுக்கு ... மதுரை கூடலழகர் கோயிலில் ஜன.,8ல் வைகுண்ட ஏகாதசி திருவிழா மதுரை கூடலழகர் கோயிலில் ஜன.,8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகையை வணங்கி செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகையை வணங்கி செல்லும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
11:01

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள வியாசமுனிவரின் பாதுகையை வலம் வந்து வணங்கி செல்கின்றனர்.

தொன்மையானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான சிவாலயங்களில் ஒன்று உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில். இங்கு மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகை உள்ளது. அக்னி தீர்த்தக்குளம் அருகே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அடியில் பாதரட்சை எனப்படும் மரத்தால் செய்யப்பட்டது இந்த பாதுகை. இவை வரலாற்றின் சுவடுகளாக உள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பாதுகையை வலம்வந்து வணங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து கோயில் ஸ்தானிக ஓதுவார் எம்.மாணிக்கம் கூறுகையில்: “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரத்தின் அடிப்பகுதியில் வியாசரின் பாதுகை உள்ளது. ஆடி மாத பவுர்ணமி அன்று மாலை 6:00 மணிக்கு, வேக வைக்காத பாசிப்பருப்பு, வெள்ளரிக்காய், பானகம், நீர்மோர் ஆகியவற்றை நைவேத்தியமாக படையல் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இலந்தை மரத்திற்கு பதரிகாவனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
பதரிகாவனத்தில் எப்போதும் தியான நிலையில் உருவமற்று இருப்பதாக ஐதீகம் நிலவி வருகிறது. இங்கு மாணிக்கவாசகருக்கு அஷ்டமா சித்தி கிடைத்தது. பாணாசுரன், மிருகண்டு மகிரிஷி, காகபுசுண்டர் உள்ளிட்ட முனிவர்கள் இலந்தை மரத்தில் தவயோக நிலையில் உள்ளனர்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவில் ஆதி பிரம்மனுக்கு அமாவாசை தாலாட்டு உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar